இராணுவத்தின் துப்பாக்கியை பறித்து சென்ற மர்ம நபர்; முல்லைத்தீவில் சம்பவம்
முல்லைத்தீவில் இராணுவ சிப்பாய் ஒருவரின் ஏகே-47 துப்பாக்கியை மர்ம நபர் ஒருவர் பறித்துக்கொண்டு தப்பி செறுள்ளத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. முல்லைத்தீவு ஆண்டாள்குளம் காட்டுப்பகுதியில் நடைபெற்றுவரும் சட்டவிரோத மரம் கடத்தலை தடுப்பதற்கு நின்ற சிப்பாயின் துப்பாக்கியையே மர்ம நபர் ஒருவர் பறித்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த நபரை இராணுவத்தினரும் பொலிஸாரும் வலைவிரித்து தேடிவருவதாகவும் இதனால் அப்பகுதிகாளில் பதற்ற நிலை தோன்றியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed